Published : 03 Apr 2022 11:24 AM
Last Updated : 03 Apr 2022 11:24 AM

360: மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்

தமிழின் தனித்துவமிக்க படைப்பாளிகளுள் ஒருவர் மா.அரங்கநான். அவருடைய நினைவாக அவர் மகனும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான அரங்க.மகாதேவன் 2018-லிருந்து ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ வழங்கிவருகிறார். 2022-க்கு குடவாயில் பாலசுப்ரமணியனும் ட்ராட்ஸ்கி மருதுவும் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ஒரு லட்சம் ரொக்கப் பரிசைக் கொண்டது இந்த விருது. விருது வழங்கும் விழா ஏப்ரல் 16-ல் ராணி சீதை அரங்கில் நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் இந்நிகழ்வில் பங்குகொண்டு விருதுகளை வழங்கவிருக்கிறார். குடவாயில் பாலசுப்ரமணியனுக்கும் ட்ராட்ஸ்கி மருதுவுக்கும் வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x