Published : 09 Mar 2016 10:06 AM
Last Updated : 09 Mar 2016 10:06 AM

கண்ணய்யாவின் கருத்துகள்

‘இந்தியாவிடம் இருந்து அல்ல... இந்தியாவில் சுதந்திரம் வேண்டும்: கண்ணய்யா தெறிக்கவிட்ட 20 கருத்துகள்!’ என்ற செய்தியைப் படித்தேன். ஊழல்களுக்கு எதிராகவும், இயற்கை வளங்களைக் கொள்ளை அடிப்பவர்களுக்கு எதிராகவும், சாதி அரசியலுக்கு எதிராகவும், மதவாதத்துக்கு எதிராகவும் முழக்கமிட்டால் அது முற்றிலும் வரவேற்கத்தக்கதே. ஆனால், நமது ஜனநாயகக் கட்டமைப்பைச் சீர்குலைக்க முயன்ற தீவிரவாதிக்கு நினைவு நாள் கொண்டாடுவதும், பெற்றெடுத்த தாய்நாட்டுக்கு எதிராக வீர முழக்கமிடுவதுமா சுதந்திரம்? இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இருப்பதால்தான் 20 கருத்துக்களை இவரால் இப்படித் தெறிக்கவிட முடிகிறது. அதனை ஊடகங்களும் துணிந்து வெளியிட முடிகிறது என்பதை முதலில் அனைவரும் உணர வேண்டும்.

- சசிபாலன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x