Published : 27 Feb 2024 06:16 AM
Last Updated : 27 Feb 2024 06:16 AM
மனித - ஜனநாயக உரிமைகளைப் பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் தன் வாழ்நாள் முழுதும் செயல்பட்ட மகபூப் பாட்சா (64), பிப்ரவரி 14 அன்று சென்னையில் காலமானார். மதுரை சோக்கோ அறக்கட்டளையின் நிர்வாக மேலாளரான அவர், நீதிமன்றத்தில் தனது இருத்தலை நிறுவாத ஒரு வழக்கறிஞராக வாழ்ந்தார்; கனிந்த மனிதநேயர். அவரது வாழ்க்கை, மனித உரிமையில் அக்கறை கொண்ட அனைவருக்கும் வழிகாட்டக்கூடியது.
மனித உரிமைக் குரல்: மதுரையில் 1980களில் சைக்கிள் ரிக் ஷா வண்டிகள் நகர் முழுதும் இருந்தன. அந்நாள்களில் சாலை விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அவர்களிடம் காவல் துறையினர் சிலர் ஐந்து ரூபாய் பணம் கேட்பதும், அவர்கள் தர முடியாதபோது ரிக் ஷா இருக்கையைக் கழற்றி எடுத்துச் செல்வதும் நடைமுறையாக இருந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT