Published : 28 Nov 2023 06:25 AM
Last Updated : 28 Nov 2023 06:25 AM

ப்ரீமியம்
ஆளுநரின் அதிகாரம்: தெளிவைத் தரும் தீர்ப்பு

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலைக் காலவரையறை யின்றி நிறுத்திவைப்பதன் மூலம் மசோதாக்களைத் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தெளிவான தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்திருப்பதற்கு எதிராக, பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மாநிலத்தின் சட்டமன்றத்துக்குப் பொறுப்பு வகிக்கின்ற - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - அரசுதான் மாநில விவகாரங்களை நடத்த வேண்டும் என்பதே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை விதி. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான அரசமைப்புக் கூறு 200 குறித்த உச்ச நீதிமன்றத்தின் விளக்கம், அதற்கு இசைவானதாகவே இந்தத் தீர்ப்பில் வெளிப்பட்டுள்ளது. தன்னுடைய ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை நிறுத்திவைப்பதற்கும் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்புவதற்கும் ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x