Published : 30 Oct 2023 09:09 AM
Last Updated : 30 Oct 2023 09:09 AM

ப்ரீமியம்
கத்தார் மரண தண்டனை: இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும்

கத்தாரில் பணியாற்றிவந்த இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை ஒட்டி சர்வதேச அரசியலில் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியாவுக்கு இத்தகைய வெளியுறவு-ராஜதந்திர சோதனை எழுந்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்தியர்களும் செய்த குற்றம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. 2022 ஆகஸ்ட் 30 அன்று அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை குறித்த முழுமையான தகவல்கள் அவர்களின் குடும்பத்தினருக்கும் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கும் வழங்கப்படவில்லை. எட்டு பேரும் கத்தாரில் பாதுகாப்பு சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் கத்தார் அரசின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் இதுதொடர்பாகக் கசிந்த தகவல்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இவை எதுவும் அதிகாரபூர்வமான, உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் அல்ல. இவர்களின் தண்டனையைத் தவிர்ப்பது அல்லது குறைப்பதற்கு இந்திய வெளியுறவு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x