Published : 04 Feb 2023 06:47 AM
Last Updated : 04 Feb 2023 06:47 AM

ப்ரீமியம்
நூல் நயம்: மதுரை வட்டாரக் கதைகள்

சி.சு.செல்லப்பா மதுரை வட்டார மொழியில் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. கால சுப்ரமணியம் இதைத் தேடித் தொகுத்துள்ளார். இக்கதைகளின் கூற்றுமொழியை பிரமிள் ‘கொச்சை மொழி’ என்று கருதியதாகப் பதிப்பாளர் உரையில் சொல்லப்பட்டுள்ளது கவனம் கொள்ளத்தக்கது. ‘பில்’, ‘திராட்டு’ என்பன வட்டார புழங்குச் சொற்கள் பல இக்கதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வட்டார வழக்கையும் பண்பாட்டையும் செல்லப்பா தன் கதைகளில் ஆர்வத்துடன் பயன்படுத்தியிருப்பதைக் கதைகளை வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள். இதில் பிரபல நாவலான ‘வாடிவாசல்’, உள்பட 9 சிறுகதைகள், ‘முறைப்பெண்’ நாடகம் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. செல்லப்பாவின் கட்டுரையும் செல்லப்பா பற்றி பிரமிள் எழுதிய இரு கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. - ஹுசைன்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x