Published : 12 Nov 2022 06:30 AM
Last Updated : 12 Nov 2022 06:30 AM
ஜனவரியில், முதல் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைச் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தத் தமிழ்நாடு அரசு தயாராகிவருகிறது. இதுவரை இந்தியாவில் புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் மட்டுமே பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் நடைபெற்றுள்ளன. பன்னாட்டுப் புத்தகக் காட்சி என்பது உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, புத்தகத் துறையில் உள்ளவர்கள் பங்கேற்கும் ஒன்றாகும். இதன் அடிப்படை நோக்கம், ஒரு நாட்டிலிருந்து புத்தகங்கள் பல நாடுகளுக்கும் வெவ்வேறு மொழிகளுக்கும் சென்றடைய உதவுவது. ஜெர்மனியில் உள்ள பிராங்ஃபர்ட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேசப் புத்தகக் காட்சியில் உலகம் முழுவதுமிருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், உரிமை முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் சந்தித்துக்கொள்கின்றனர்.
இத்தகைய புத்தகக் காட்சிகள், ஒரு மொழியில் வெளியான படைப்பை பல்வேறு மொழிகளுக்கான உரிமைகளை விற்கப் பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் உதவுகின்றன. எந்த எழுத்தாளரும் தனது படைப்புகளை முடிந்தவரை உலகெங்கும் சென்றடைய வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டிருப்பார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT