Published : 17 Sep 2022 07:21 AM
Last Updated : 17 Sep 2022 07:21 AM
கவிஞர் சூ.சிவராமன் ‘சற்றே பெரிய நிலக்கரித் துண்டு’ தொகுப்பின் வழி தன் கவியுலகைத் திடமாக வெளிப்படுத்திக் கொண்டவர். நிலமும் அரசியலும் அதன் பாடுபொருளாக இருந்தன. ‘உப்பை இசைக்கும் ஆமைகள்’ தொகுப்பிலும் அதன் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. கடல் சார்ந்த பரதவ வாழ்வைத் தன் கவிதைக் களமாக வரித்துக்கொண்டுள்ளார். அதற்குள் முங்கி முத்தெடுத்துள்ளார். இந்தத் தொகுப்பில் கடலும் கடல் சார்ந்த வாழ்வு, உப்பும் கவுச்சி நாற்றமுமாகப் பதிவாகியுள்ளது. அண்டசராசரங்களையும் சிவராமன் விண்மீன்கள் தட்டுப்படும் கடற்கரையோரத் தன் சிறு கீற்றுக் குடிசைக்குள் இழுத்துவந்திருக்கிறார். பெரிய அலைகளைப் போல் இரண்டாயிரம் வருடத் தமிழ்ப் பண்பாட்டு வரலாறு கவிதைகளுக்குள் உருண்டு புரள்கிறது. மாபெரும் உருவாக விரிந்து கிடக்கும் கடலை ஆவிசேர அணைக்க சிவராமனின் கவிதைகள் முயன்று திணருகின்றன. கடலைக் கடல் என அழைத்து அழைத்துத் தீராமல் பெளவம், பரவை, புணரி எனத் தமிழால் அணைத்துத் திளைப்பதிலிருந்து இந்தக் காதலைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT