Published : 18 Jun 2022 07:50 AM
Last Updated : 18 Jun 2022 07:50 AM
இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரியாகத் தமிழ்நாடு அரசிலும், மத்திய அரசிலும் 35 ஆண்டுகள் பணியாற்றியவர் இரா.பூரணலிங்கம். ஆங்கிலத்தில் 4 நூல்களை எழுதியுள்ளார். அவரின் முதலாவது தமிழ் நூல் இது. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலுமிருந்து மொத்தம் 100 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் வாழ்வியல் விளக்கமாக இந்நூலை எழுதியுள்ளார்.
குறள் விளக்கத்தில், அவரது ஆட்சிப் பணித் துறை அனுபவங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. நெறிபிறழாத அரசு நிர்வாகப் பணிக்கு திருக்குறளே வழிகாட்டி என்பதன் அனுபவ சாட்சியம் இக்கட்டுரைகள். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கான போட்டித் தேர்வுகளில் திருக்குறளும் ஒரு முக்கியமான பாடமாகியிருப்பதன் பொருத்தத்தையும் உணர முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT