Published : 23 Apr 2022 07:35 AM
Last Updated : 23 Apr 2022 07:35 AM

ப்ரீமியம்
ஆசிரியர்கள் ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும்?

சு.உமாமகேசுவரி

தமிழகத்தை அறிவார்ந்த சமூகமாக உயர்த்தும் பொருட்டு மாநிலம் முழுவதும் இலக்கியத் திருவிழாக்கள் மற்றும் புத்தகக் காட்சிகள் நடத்திடவும், புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாகக் கொண்டுசெல்லவும், தமிழ்நாடு முதல்வர் 2022-2023 நிதிநிலை அறிக்கையில், ஆண்டுக்கு ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார். பாராட்டுக்குரிய முன்னெடுப்பு இது.

பள்ளிகள்தான் பாடநூல் தாண்டிய வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முக்கிய இடம். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வாசிப்புக்கான வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருக்கின்றன. வருடந்தோறும் நூலகத்துக்குப் புத்தகங்களாகவோ அல்லது புத்தகங்கள் வாங்க நிதியாகவோ எல்லாப் பள்ளிகளுக்கும் அரசு வழங்கிவருகிறது. ஏறத்தாழ 15 வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் இந்தச் செயல்பாடு நடந்துவருகிறது. நூலக வாசிப்புக்கு என வாரத்தில் ஒரு பாட வேளையையும் பள்ளிகள் ஒதுக்கியுள்ளன. இவற்றையெல்லாம் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், தற்போது வெளிவரும் கல்வித் துறை சார்ந்த சில குற்றச்சாட்டுகளுக்கு இடமே இருந்திருக்காது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x