Published : 08 Jun 2019 10:52 AM
Last Updated : 08 Jun 2019 10:52 AM

க்ளைமேட்

தற்காலத் தமிழ்ப் படைப்புலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளின் பங்களிப்புகளோடு வெளிவந்திருக்கிறது ‘க்ளைமேட்’ என்ற புதிய மாத இதழ். ஓவியர் நடேஷ், எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்களும், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளும், ஸ்ரீநேசன், ராணிதிலக், ந.பெரியசாமி, அதீதன், ஸ்ரீசங்கர் ஆகியோரின் கவிதைகளும் இதழுக்கு அடர்த்தியைத் தருகின்றன. ‘மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள்’ எனும் ஜி.குப்புசாமியின் கட்டுரை இளம் மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று. ஓவியர் நடேஷின் நேர்காணலில் அதீத ஆங்கிலக் கலப்பைத் தவிர்த்திருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x