Published : 08 Jan 2019 09:33 AM
Last Updated : 08 Jan 2019 09:33 AM
சுதர்சன், சுரேகா இருவரும் புதுமணத் தம்பதி. தீவிர வாசகரான சுதர்சன் இம்முறை தன் மனைவியையும் அழைத்துவந்திருந்தார். “இராசேந்திரசோழன் கதைகள் முழுத் தொகுப்பு, ராஜ் கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, முரசொலி மாறனின் ‘மாநில சுயாட்சி’, எஸ்.விஜய்குமாரின் ‘சிலைத் திருடன்’ ஆகிய நூல்களை வாங்கினேன்” என்ற அவர், “என் மனைவிக்கு ஏற்கெனவே வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் தமிழ்ப் புத்தகங்களை வாசித்ததில்லை. ஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் கதைகள் வேடிக்கையாகவும் உணர்வுபூர்வமாகவும் எளிமையாகவும் இருக்கும். அவரது கதை ஒன்றை வாசித்துக்காண்பித்தேன். அவளுக்குப் பிடித்திருந்தது. எனவே, ஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் ‘இதயத்தைத் திருடுகிறாய்’, ‘சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே’ புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT