Published : 13 Jan 2018 10:27 AM
Last Updated : 13 Jan 2018 10:27 AM
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
அ.கி.பரந்தாமனார், பாரி நிலையம், விலை ரூ.160, பக்.496
தமிழில் எழுதும்போது வாக்கிய அமைப்பு சரிதானா, பயன்படுத்தும் வார்த்தை சரிதானா, சந்திப் பிழை இருக்கிறதா என்று பல கேள்விகள் எழுவது இயல்பானது. பிழைகளைத் தவிர்த்து, தமிழை எழுதவேண்டுமெனில் அடிப்படை இலக்கணங்களில் தேர்ச்சி பெறவேண்டும். இலக்கண விதிகளை, எளிமையாகவும் சுவையாகவும் உதாரணங்களோடு விரிவாக விளக்குகிறது இந்நூல். மாணவர்கள் தொடங்கி எழுத்தாளர்கள் வரை அனைவருக்கும் பயன்படக்கூடிய புத்தகம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT