Last Updated : 07 Oct, 2023 06:16 AM

 

Published : 07 Oct 2023 06:16 AM
Last Updated : 07 Oct 2023 06:16 AM

ப்ரீமியம்
நம் வெளியீடு: வாழ்க்கைக்கான வழிகாட்டி

வாழ்க்கை என்பதே ஒரு சூத்திரம்தான் எனச் சாதித்தவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். தமது வாழ்க்கையை அதன்படி திட்டமிட்டுச் செயல்படுத்தி வெற்றி கண்டவர்கள் அதைச் சொல்லும்போது, அதற்குத் தனிக் கவனம் கிடைக்கிறது. அதுபோல் வெற்றிக்கான சூத்திரங்களைச் சொல்லும் நூல் என இதைச் சொல்லலாம். ஒரு காரியம் செய்வதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும் என்று சாணக்கியர் பகிர்ந்ததை மேற்கோள் காட்டுகிறார் நூலாசிரியர். அதற்கு உதாரணமாக நூலாசிரியர் சந்தித்த ஓர் அனுபவத்திலிருந்து வாசகர்களை சாணக்கியரின் வகுப்பறைக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு சாணக்கியர் நமக்கு எளிமையாகப் பாடம் நடத்துகிறார். ஒரு காரியத்தைக் கையில் எடுக்கும் முன் மூன்று கேள்விகளை நமக்குள்ளே கேட்டுக்கொள்ளச் சொல்கிறார். ஒன்று; ஏன் இதைச் செய்கிறேன். இரண்டு; இதனால் என்ன நடக்கும். மூன்று; நாம் எடுத்துக்கொள்ளும் இந்தக் காரியத்தில் வெற்றிபெற முடியுமா? காரியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது சிறியதோ பெரியதோ இந்தக் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் என சாணக்கியர் வழி ஆலோசனையை இந்தப் புத்தகம் வழங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x