Published : 18 Nov 2017 11:30 AM
Last Updated : 18 Nov 2017 11:30 AM

நூல் நோக்கு: அம்பலமாகும் முறைகேடுகள்!

மு.இராமசுவாமி நாடக நடிகர், இயக்குநர், ஆய்வாளர், பல்கலைக்கழகங்களில் 37 ஆண்டுகள் கல்விப் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பரிந்துரைக் குழுவில் அவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது, அக்குழுவின் நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாது விலகிவிட்டார். அக்குழுவில் நடந்த முறைகேடுகளைத் தற்போது பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறார். பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதற்குப் பரிந்துரைக் குழுவை அமைப்பது ஒரு தீர்வாகக் கருதப்பட்டது. ஆனால், அவ்வாறு அமைக்கப்படும் குழுவின் செயல்பாடுகளும் சந்தேகத்துக்கு உரியவையாகவே இருக்கின்றன. உறுப்பினர்களிடமிருந்து கருத்து கேட்கப்படாமலேயே அவர்களும் குழுவின் பொதுக்கருத்துக்கு உடன்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மைநிலை அதற்கு மாறானது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்லும் தன்னிலை விளக்கம் இது. பல்கலைக்கழகங்கள் முறைகேடுகளின் கூடாரமாக ஆகிவிட்டன என்ற குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.

- புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x