பங்குச் வர்த்தக நஷ்டத்தால் கடத்தல் நாடகம்: குடும்பத்தினரிடமே ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு

பங்குச் வர்த்தக நஷ்டத்தால் கடத்தல் நாடகம்: குடும்பத்தினரிடமே ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு
Updated on
1 min read

சூரத்: குஜ​ராத் மாநிலம் சூரத்​தைச் சேர்ந்த கணக்​காளர் ஜிக்னேஷ் தலா​வி​யா, பங்குச் சந்தை வர்த்​தகத்​தில் நஷ்டம் அடைந்து குடும்​பத்​தினரிடமே கடத்தல் நாடகமாடியுள்ளார்.

கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல் போன ஜிக்​னேஷ், தான் கட்டி வைக்​கப்​ பட்​டிருப்​பது போன்ற ஒரு வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்​பி​யுள்​ளார். அந்த வீடியோ​வில் தன்னை மர்ம நபர்​கள் கடத்​தி​விட்​ட​தாக​வும், தன்னை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்​டும் என்று அவர்​கள் கூறு​வ​தாக​வும் தெரிவித்​துள்​ளார். இதுகுறித்து போலீ​ஸாருக்கு தகவல் தெரிவித்தால் தன்னை கொன்​று​விடு​வார்​கள் என்​றும் கூறியுள்ளார்.

ஜிக்​னேஷ் குடும்​பத்​தினர் இதுகுறித்து சூரத் போலீ​ஸில் புகார் செய்​தனர். இதன் அடிப்​படை​யில், போலீ​ஸார் தரப்​பில் பல்​வேறு குழுக்​கள் அமைக்​கப்​பட்டு தீவிர தேடு​தல் வேட்​டை​யில் இறங்கினர். கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் மற்​றும் செல்​போன் சிக்​னல்​களை ஆய்வு செய்தனர். பின்னர் ஜூன் 15-ம் தேதி கோத்ரா​வில் உள்ள ஒரு ஓட்​டலில் இருந்து ஜிக்​னேஷ் கைது செய்யப்​பட்​டார்.

விசா​ரணை​யில், அவர் தன்​னைத் தானே கயிற்​றால் கட்​டிக் கொண்டு வீடியோ எடுத்து குடும்​பத்தினரை ஏமாற்​றியதை ஒப்புக்கொண்​டார். பங்​குச் சந்​தை​யில் ஏற்​பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இது​போன்று செய்​த​தாக அவர் தெரி​வித்​தார்.

இதையடுத்​து, ஜிக்​னேஷ் மீது பொய் வழக்​குப் பதிவு செய்​தல், ஆதா​ரங்​களை உரு​வாக்​குதல் மற்​றும் அரசு இயந்​திரத்தை தவறாகப் பயன்​படுத்​துதல் ஆகிய பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ பதிவு செய்​துள்​ளனர்​.

பங்குச் வர்த்தக நஷ்டத்தால் கடத்தல் நாடகம்: குடும்பத்தினரிடமே ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு
விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அமைச்சருக்கு நேரம் இல்லையா? - கரும்பு விவசாயிகள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in