கேரளாவில் கோயில் வளாகத்தில் கஞ்சா செடி - கலால் துறையினர் தீவிர விசாரணை

கேரளாவில் கோயில் வளாகத்தில் கஞ்சா செடி - கலால் துறையினர் தீவிர விசாரணை
Updated on
1 min read

கோட்டயம்: கேரளா​வில் போதைப்​ பொருள் நடமாட்​டத்தை ஒடுக்க கலால் மற்​றும் மாநில உள்​துறை அமைச்​சகம் இணைந்து ‘ஆபரேஷன் தண்​டர்’ என்ற பெயரில் அதிரடி வேட்​டையை நடத்தி வரு​கின்​றன.

இந்நிலையில், வாகத்​தானம் மணி​கண்​டபுரம் கோயில் வளாகத்தில் உள்ள மூடிய வழிப்​பாதை​யின் அருகே 2 கஞ்சா செடிகள் வளர்ந்​திருப்​பது குறித்து கோயில் ஊழியர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்​து, கலால் அமலாக்​கப் ​பிரிவு மற்​றும் போதைப்​ பொருள் தடுப்பு சிறப்​புப் படை ஆய்​வாளர் தர்​ஷக் தலை​மையி​லான அதி​காரி​கள் குழு​வினர் கோயில் வளாகத்​தில் வளர்ந்​திருந்த அந்த இரண்டு செடிகளை​யும் ஆய்வு செய்து அவை கஞ்சா செடிகள் என்​பதை உறுதி செய்தனர்.

அந்த செடிகளை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். மீட்​கப்​பட்ட செடிகள் முறையே 15.5 சென்​டி மீட்​டர் மற்​றும் 13 சென்​டி மீட்​டர் உயரம் கொண்​டவை என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

கடந்த மே மாதம் இந்​தக் கோவிலில் திரு​விழா நடை​பெற்​றது. அந்த சமயத்​தில் பொது ​மக்​களின் வரு​கைக்கு எவ்​வித கட்டுப்பாடுகளும் விதிக்​கப்​பட​வில்​லை. அப்​போது கோவிலுக்கு வந்த யாரோ ஒரு நபர், கஞ்​சாவைப் பயன்​படுத்​திய பிறகு அதன் எஞ்​சிய பகு​தி​களை அங்​கேயே வீசிச் சென்​ற​தால் இந்த செடி வளர்ந்​திருக்​காலம் என்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரியவந்​துள்​ளது.

இருப்​பினும், இது குறித்து கலால் துறை​யினர் தொடர்ந்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். மாநிலத்​தில் போதைப்​ பொருள் கலாச்​சா​ரத்தை முற்​றி​லு​மாக ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்​கைகள் குறித்து கேரள உள்​துறை அமைச்​சர் ரமேஷ் சென்​னிதலா சனிக்​கிழமை நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் பேசினார்.

அப்​போது அவர், ”கேரளாவை போதைப் ​பொருள் இல்​லாத மாநிலமாக மாற்​று​வதே அரசின் இலக்​கு. இதற்​காக உள்​துறை அமைச்​சகம், சுகா​தா​ரம், எக்​சைஸ் (கலால்) மற்​றும் கல்​வித் துறைகளு​டன் இணைந்து பல்​வேறு விழிப்​புணர்வு மற்​றும் தடுப்புத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இது புதிய தலை​முறை​யினருக்​குப்​ பெரிதும்​ பயனுள்​ள​தாக அமை​யும்​” என்​றார்​.

கேரளாவில் கோயில் வளாகத்தில் கஞ்சா செடி - கலால் துறையினர் தீவிர விசாரணை
நாள்தோறும் யோகா செய்ய வேண்டும்: பொதுமக்களுக்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in