Published : 15 May 2023 04:31 AM
Last Updated : 15 May 2023 04:31 AM

ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: பிரம்மோஸ் ஏவுகணை நமது ராணுவம் மற்றும் விமானப்படையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒலியைப்போல 5 மடங்கு வேகத்தில் செல்லும்.

கடற்படை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலில் இருந்து நேற்று ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏவுகணைகளை வீசும்திறன் வாய்ந்த ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலும், பிரம்மோஸ்ஏவுகணையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. தற்சார்பு இந்தியா திட்டத்துக்கும், கடற்படையின் வலிமையை காட்டுவதற்கும், இந்த கப்பலும், ஏவுகணையும் ஜொலிக்கும் உதாரணமாக உள்ளன என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையை தற்போது நிலப் பகுதியிலிருந்தும், விமானத்திலிருந்தும், கப்பலில் இருந்தும், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x