Published : 22 Sep 2017 08:45 AM
Last Updated : 22 Sep 2017 08:45 AM
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவை தொகுதி எம்.பி.யான சாக் ஷி மகராஜ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதேநேரம் இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் சென்றிருந்த மகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போதும் சிலர் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்வது போன்ற பிறர் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் இதுபோன்ற அநாகரிக செயலில் ஈடுபடுவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதுகுறித்து யாரும் விவாதிப்பதும் இல்லை. எனவே, பொது இடங்களில் பிறர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்.
மேலும் ஆன்மிக தலைவர்களும் வருமான வரி செலுத்த வேண்டும். அத்துடன் அவர்கள் தங்களுடைய சொத்து விவரங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT