Published : 25 Mar 2023 12:45 PM
Last Updated : 25 Mar 2023 12:45 PM

இந்தியாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 1,590 ஆக அதிகரிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 1,590 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 8,601 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 832 ஆக உள்ளது. கரோனா தொற்றால் மகாராஷ்டிாராவில் 3 பேர், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட் மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிழந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 824 ஆக உள்ளது.

இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x