Published : 21 Sep 2017 10:20 AM
Last Updated : 21 Sep 2017 10:20 AM

ஹிஸ்புல் தீவிரவாதி கைது

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.

தெற்கு காஷ்மீரின் அனந்த நாக் மாவட்டம் பிஜ்பேஹரா பகுதியில் பாதுகாப்பு படையினரும் போலீஸாரும் நேற்று கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்தனர்.

பிஜ்பேஹராவில் ஜிப்லிபோரா என்ற இடத்தில் ஆடில் அகமது வசித்து வருவதாகவும் அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிர வாதி என்றும் போலீஸார் தெரிவித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x