Published : 02 Sep 2017 08:58 AM
Last Updated : 02 Sep 2017 08:58 AM

மனைவி கொலை: பொறியாளருக்கு ஆயுள் தண்டனை

டெல்லியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ராஜேஷ் குலாட்டி. மனைவி அனுபமாவுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் குடியேறினர். வேறொரு பெண்ணுடன் ராஜேஷுக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாக, கடந்த 2010 அக்டோபர் 17-ம் தேதி இரவு கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேஷ், அனுபமாவை கொலை செய்தார். அவரது உடலை வெட்டி ப்ரீஸரில் வைத்தார். 50 நாட்களுக்கு பிறகு அனுபமாவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கில் டேராடூன் கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றம் ராஜேஷ் குலாட்டிக்கு நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x