Published : 09 Feb 2023 04:57 AM
Last Updated : 09 Feb 2023 04:57 AM

அமராவதிதான் ஆந்திர தலைநகரம்: மத்திய அரசு தகவல்

அமராவதி: ஆந்திர தலைநகர விவகாரம் குறித்து நேற்று மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதில் வருமாறு: 2014 மாநிலப் பிரிவினை சட்டப்படி அமராவதிதான் ஆந்திர மாநிலத்தின் தலைநகரம். இதற்கு மத்திய அரசு இப்போதும் கூட கட்டுப்பட்டுள்ளது. ஏனெனில் மாநில பிரிவினை சட்டம் 5 மற்றும் 6-ன் படியே அமராவதி உருவானது. முதல்வர் ஜெகன் அரசு எடுக்கும் 3 தலைநகரங்கள் முடிவுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பும் இல்லை. அமராவதி தான் தலைநகரம் என 2015-ம் ஆண்டிலேயே முடிவானது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், மேலும் பேசக் கூடாது. இவ்வாறு நித்யானந்த ராய் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x