Last Updated : 08 Dec, 2016 03:17 PM

 

Published : 08 Dec 2016 03:17 PM
Last Updated : 08 Dec 2016 03:17 PM

நோட்டு நடவடிக்கை எனும் பேரிடர்: யெச்சூரி 10 தெறிப்புகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எனும் மத்திய அரசின் நோட்டு உத்தியை ஏழை மக்களைத் தாக்கும் பேரிடர் என வருணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சில கருத்துகளை முன்வைக்கிறார்.

நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் தீவிர நடவடிக்கையாக, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து வியாழக்கிழமையுடன் சரியாக ஒரு மாதம் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி, சீதாராம் யெச்சூரி #ManMadeDisaster என்ற ஹேஷ்டேக் உடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் பற்றி தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவின் 10 அம்சங்கள்:

* மோடியின் பண மதிப்பு நீக்க அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளின் விளைவை அலசுவதற்கு இந்த ஒரு மாதம் என்பது சரியான கால அளவாக இருக்கும்.

* ஊழல், பயங்கரவாதம், கள்ளப் பணம் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிப்பதுதான் இலக்குகள் என்று மோடி தன் அறிவிப்பில் குறிப்பிட்டார். இந்த இலக்குகள் அனைத்துமே தவறு என்பது ஆதாரபூர்வமாக தெரியவருகிறது.

* நவம்பர் 8-ல் தொலைக்காட்சியில் தோன்றி வெளியிட்ட அறிவிப்பில் தவறவிட்ட 'டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை' என்ற அம்சத்துக்கு இப்போது மாறியிருக்கிறார் மோடி.

* இந்தியப் பொருளாதாரத்தில் இருந்து ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை நீக்கினாலே ஒழிய, நம் போன்ற நாடுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது சாத்தியமே இல்லை.

* துக்ளக் தர்பார் காரணமாக, ஒரு மாத காலமாக அடிமட்ட அளவில் பொருளாதாரம் முடங்கி, மக்கள் கடும் சோதனைக்கு ஆளாகி வலியை அனுபவித்து வருகின்றனர்.

* கறுப்பு பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் கூடுதலாக வரியை செலுத்தி தங்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

* யாருக்காக மோடி பேசுவதாக சொல்கிறாரோ, அந்த ஏழை மக்கள்தான் நாளுக்கு நாள் கடும் துயரத்துக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.

* கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளின் வாராக் கடன்கள் எனக் காண்பிக்காத வகையில் ரூ.1.12 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதே காலக்கட்டத்தில், இந்தியாவின் 1 சதவீத எண்ணிக்கையில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 49%-ல் இருந்து 58.4% ஆக உயருகிறது. இவையே, பிரதமருக்கு யாருக்காக செயல்படுகிறார் என்பதை தெளிவாகக் காட்டும்.

* பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவதற்காக, பண மதிப்பு நீக்கம் எனும் பேரிடரால் ஏழை - நடுத்தர மக்களை வதைக்கிறது மோடி அரசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x