Published : 11 Dec 2016 10:00 AM
Last Updated : 11 Dec 2016 10:00 AM
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் நேற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் எம்.சி.மிஸ்ரா, நிபுணர்கள் வி.கே.பன்சால், வி.சீனு மற்றும் சிறுநீரக நிபுணர் சந்தீப் மகாஜன் அடங்கிய மருத்துவ குழுவினர் தலைமையில் சுமார் 4 மணி நேரம் வரை அவருக்கு இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை பிற்பகல் 2.30 மணிக்கு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு வார்டுக்கு சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோரது சிறுநீரகங்கள் அவருக்கு பொருந் தாத நிலையில் எவ்வித தொடர்பும் இல்லாத நன்கொடை யாளர் மூலம் மாற்று சிறுநீரகம் பெறப்பட்டதாகவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான அனுமதியும் பெறப்பட்டதாக மூத்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக கடந்த மாதம் 16-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்த சுஷ்மா ஸ்வராஜ், ‘‘சிறுநீரகம் செயலிழந்ததால் தற்போது நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு டயாலிசிஸ் நடந்து வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. நிச்சயம் இறைவன் கிருஷ்ணன் என்னை ஆசீர்வதிப்பார்’’ என குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT