Published : 15 Nov 2016 07:17 AM
Last Updated : 15 Nov 2016 07:17 AM

ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்த தொழிலதிபர்

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தன்னிடம் இருந்த ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார். இந்தத் தொகையில் ரூ.5,400 கோடி வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.

நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார். இந்தத் தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.

பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட், சூட்டை ஏற்கெனவே லால்ஜிபாய் ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர். மேலும் அரசின் பெண் குழந்தை களின் கல்விக்காக ரூ.200 கோடியை அவர் நன்கொடையாக அளித்துள்ளார். தன்னிடம் பணிபுரி யும் ஊழியர்களுக்கு தீபாவளி தோறும் கார், வீடுகளையும் பரிசளித்து வருகிறார்.

அவர் தாமாக முன்வந்து ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x