Published : 03 Oct 2022 07:08 AM
Last Updated : 03 Oct 2022 07:08 AM

ராகுல் காந்தி பாத யாத்திரையில் பங்கேற்கிறார் சோனியா

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி (கோப்புப்படம்).

புதுடெல்லி: தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பாத யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவுக்கு அடுத்து கர்நாடகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்தார். இந்த மாநிலத்தில் 21 நாட்களில் 511 கி.மீ. வரை அவர் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், அம்மாநிலத்தில் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள நடை பயணத்தின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளார்.

இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x