Published : 26 Oct 2016 10:11 AM
Last Updated : 26 Oct 2016 10:11 AM

இந்திய துருப்புகள் பதிலடியில் 3 பாக். ராணுவத்தினர் பலி

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பதில் தாக்குதலில் அந்நாட்டின் 2-3 வீரர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

ரஜவுரி மாவட்டம், நவ்ஷெரா செக்டார் பகுதியில், நேற்று காலை 10 மணி முதல் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 2 -3 வீரர்கள் இறந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

இதுபோல் ஜம்மு மாவட்டம், ஆர்.எஸ்.புரா செக்டார், சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் நேற்று பிற்பகல் தாக்குதல் தொடங்கினர். இதில் சச்சேத்கார் பகுதியில் ஒரு வீட்டை பீரங்கி குண்டு தாக்கியதில் 6 பெண்கள் காயம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x