Published : 29 May 2016 11:16 AM
Last Updated : 29 May 2016 11:16 AM

ரோஜா தேர்தல் வெற்றியை எதிர்த்து மனு தாக்கல்

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நகரி தொகுதியில் ரோஜா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி ராயுடு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென ரோஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, இரு தரப்பு வாதங்களையும் ஒரே நாளில் கேட்பதாக நீதிபதி கூறினார். இதற்கு ஒப்பு கொள்ளாத ரோஜா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் ஜூன் 6-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x