Published : 09 Mar 2022 07:47 AM
Last Updated : 09 Mar 2022 07:47 AM

இந்திய தமிழ்ச் சங்க பேரவை தலைவர் காலமானார்

பெங்களூரு: அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவையின் தலைவர் மீனாட்சி சுந்தரம் (எ) முத்துசெல்வன் (79) திருச்சியைச் சேர்ந்தவர். பெங்களூருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் தனித்தமிழ் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x