Published : 04 Apr 2016 08:43 AM
Last Updated : 04 Apr 2016 08:43 AM
மணிப்பூரில் ஆயுதம் ஏந்தி போராடி வரும் கங்லேய்பாக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொலிட்பீரோ நிலைக் குழு தலைவரான நாங்டெரன்கோம்பா விமானம் மூலம் தப்பிச் செல்ல திட்ட மிட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இம்பா லில் உள்ள துளிஹால் விமான நிலையத்தில் பாதுகாப்பு கெடு பிடிகள் அதிகரிக்கப்பட்டு கண் காணிப்பும் தீவிரப்படுத்தப்பட் டிருந்தது. இரு தினங்களுக்கு முன் விமான நிலையத்துக்கு வந்த நாங்டெரன்கோம்பாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி, வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT