Last Updated : 24 Apr, 2016 11:16 AM

 

Published : 24 Apr 2016 11:16 AM
Last Updated : 24 Apr 2016 11:16 AM

சாரதா சிட் பண்ட் ஊழல் மூலம் மக்களிடம் மம்தா அரசு கொள்ளை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

மக்களுக்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு வழங்குவதே ஓர் அரசாங்கத்தின் பணி. ஆனால் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அதைச் செய்யவில்லை. சாரதா சிட் பண்ட ஊழல் மூலம் மக்களின் அனைத்து பணம் மற்றும் சேமிப்புகளை கொள்ளையடித்து விட்டது. இதற்கு முன் பிற மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு தேடி இங்கு வந்து கொண்டி ருந்தனர். தற்போது இங்குள் ளவர்கள் வேலைவாய்ப்பு தேடி பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்தால், இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கு வதே முன்னுரிமைப் பணியாக இருக்கும். இவ்வாறு ராகுல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x