Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

உத்தராகண்ட் மாநிலத்தின் ஆளுநர் பேபி ராணி மவுரியா ராஜினாமா

டேராடூன்

உத்தராகண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாகவும் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.

உத்தராகண்ட் ஆளுநராக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பேபி ராணி மவுர்யா பதவியேற்றார். மார்கரெட் ஆல்வாவுக்கு பிறகு உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது பெண் ஆளுநர் என்ற சிறப்பை பெற்றிருந்தார். இந்நிலையில் 2 ஆண்டு பதவிக் காலம் எஞ்சியுள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்.

ஆளுநராக பதவியேற்கும் முன் உத்தரபிரதேசத்தில் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை பேபி ராணி வகித்துள்ளார். சமாஜ் ரத்னா, உத்தரபிரதேஷ் ரத்னா, நாரி ரத்னா ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

தலித் சமூகத்தை சேர்ந்த பாஜக தலைவரான இவர், உ.பி.யில் கடந்த 2007 தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அரசியல் செயல்பாடுகளை குறைத்துக் கொண்டார். உ.பி. சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பேபி ராணி மவுர்யாவுக்கு மாநிலத்தில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x