Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM
பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் செல்கிறார். அலிகர் மாவட்டத்தில் 92.27 ஏக்கரில் அமைய உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்தப் பல்கலைக் கழகத்துக்கு ரூ.101 கோடி செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. 2023 ஜனவரி மாதத்துக்குள் பல்கலைக்கழக கட்டுமானப் பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அலிகர், இடா, ஹத்ராஸ், காஸ்கஞ்ச் மாவட்டங்களில் உள்ள 395 கல்லூரிகள் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலை.யுடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT