Published : 09 Aug 2021 04:27 PM
Last Updated : 09 Aug 2021 04:27 PM

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 50.86 கோடியை கடந்தது 

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 50.86 கோடியைக் கடந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 58,79,068 முகாம்களில் 50,86,64,759 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 16,11,590 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில், இதுவரை மொத்தம் 3,11,39,457 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,686 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து 43 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,02,188 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.26 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 13,71,871 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 48,17,67,232 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 2.35 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.59 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.

தொடர்ந்து 63 நாட்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 14 நாட்களாக இந்த எண்ணிக்கை மூன்று சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x