Last Updated : 15 Dec, 2015 09:38 AM

 

Published : 15 Dec 2015 09:38 AM
Last Updated : 15 Dec 2015 09:38 AM

பெண் ஓவியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் உ.பி.யில் கைது

மும்பையில் பெண் ஓவியர் ஹேமா உபாத்யாயா, அவரது வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஹேமா தனது கணவரும் ஓவியருமான சிந்தன் உபாத்யாயாவிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். இவ்வழக்கில் ஹேமா தரப்பில் ஹரீஷ் ஆஜராகி வருகிறார்.

இந்த இரட்டைக் கொலை குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் சிவகுமார் என்பவரை உ.பி. மாநிலம் வாரணாசியில் உத்தரப்பிரதேச சிறப்புப் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளதாக லக்னோ காவல் துறை ஐ.ஜி (சட்டம் ஒழுங்கு) சதீஷ் கணேஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஆஸாத் ராஜ்பார், பிரதீப் ராஜ்பார், விஜய் ராஜ்பார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிடிபட்ட மூவரும் ஹேமா மற்றும் சிந்தன் இருவரும் ஓவியம் உருவாக்க பயன்படுத்தும் பைபர் கண்ணாடிகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஹேமா கொலை செய்யப்படுவதற்கு முன்பு, மூவரில் ஒருவர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x