Last Updated : 30 Dec, 2015 06:09 PM

 

Published : 30 Dec 2015 06:09 PM
Last Updated : 30 Dec 2015 06:09 PM

அயோத்தியில் கோயில் கட்ட ஏற்பாடு: எதிர்ப்பு தெரிவித்து இந்திய வரலாற்று சபை தீர்மானம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கற்கள் குவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் சங்பரிவார் இடையே ஏற்பட்ட பேச்சு மோதலைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வரலாற்று சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அயோத்தியில் சேர்க்கப்பட்டு வரும் கற்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கையாகவே தெரிகிறது. மதம் சார்ந்த உணர்வுகளைக் கொண்டு சட்டத்தையும் எதிர்த்து பாரம்பரிய சின்னங்களை அழிக்கும் விளையாட்டில் சில அமைப்புகள் ஈடுபடுவதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

1528-ல் கட்டப்பட்ட பாபர் மசூதி வரலாற்று இடைக்காலத்தின் கிழக்கத்திய கட்டிடக்கலைநுட்பம் கொண்ட நினைவுச்சின்னமாக திகழ்கிறது.

எனவே அதனை பாதுகாக்க வேண்டிய உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அது 1992ல் இடிக்கப்பட்டது. அந்த இடிப்புச் சம்பவம் நடந்ததற்கு காரணமே புதிய கோயிலை அங்கு கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் தான்" என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x