Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

1.2 கோடி தடுப்பூசியை வாங்கிய தனியார் மருத்துவமனைகள்

புதுடெல்லி

தனியார் மருத்துவமனைகளில் கடந்த மே 1-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஏராளமான தனியார் மருத்துவமனைகள் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் கோவாக்சின் தயாரிக்கும் பாரத்பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, கடந்த மே மாதத்தில் 1.2 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்துள்ளன. இதில் 22 லட்சம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x