Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM
திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் நேற்று நடை பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி கூறும்போது, “ஒருவருக்கு ஒருபதவி கொள்கையை பின்பற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே கட்சியில் நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் மேற்கொள்ளப்படும். கட்சியின் இளைஞரணி தலைவர் அபிஷேக் பானர்ஜியை, தேசிய பொதுச் செயலாளராக மம்தா நியமித்துள்ளார். பேரவை தேர்தலுக்கு முன் கட்சியிலிருந்து வெளியேறி பலர் மீண்டும் கட்சிக்கு திரும்ப விரும்புகின்றனர். ஆனால் இது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை” என்றார்.
மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜி, டைமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து 2-வது முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இது வரை வகித்த இளைஞரணி தலைவர் பதவிக்கு, நடிகராக இருந்துஅரசியல்வாதியாக மாறியசயோனி கோஷ் நியமிக்கப்பட் டுள்ளார். இதுபோல் பத்திரிகை யாளர் குணால் கோஷ், மாநிலச்செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT