Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM
மத்திய நிதி அமைச்சகத்தில் உயர் அதிகாரிகளின் பதவிப் பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை பொருளாதார விவ காரத் துறைச் செயலர் பொறுப்பை வகித்து வந்த தருண் பஜாத் தற்போது வருவாய் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் துறை செயலராக இருந்த அஜய் பூஷண் பாண்டேகடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அப்பொ றுப்பை கூடுதலாக தருண் பஜாஜ் கவனித்து வந்தார்.
புதிய பதவி மாற்றத்துக்கு மத்திய பணியாளர் நியமனத்துக் கான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி கர்நாடக பிரிவிலிருந்து 1987-ம் ஆண்டு ஐஏஎஸ் ஆன அஜய் சேத், புதிய பொருளாதார விவகாரத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(பிஎம்ஆர்சிஎல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பைவகித்து வருகிறார். இவரதுஅனுபவத் திறன் நிதி அமைச்சகத்துக்குத் தேவைப்படுவதால் கர்நாடக மாநிலத்திலிருந்து தற்போது இவர் நிதி அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிதி ஆலோசகர் மற்றும் சிறப்பு செயலராக உள்ள அலி ராஸா ரிஸ்வி, மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பதவியில் உள்ளசைலேஷ் தற்போது பொதுத் துறைநிறுவன தேர்வு வாரியத்தின்உறுப்பினராக நியமிக்கப்பட் டுள்ளார்.
சோலார் எனர்ஜி கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள ஜதிந்திர நாத் ஸ்வைன் மீன் வளத் துறை செயல ராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலராக உள்ள கியானேஷ் குமார், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறைச் செயல ராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறையின் சிறப்புச் செயலராக உள்ள இந்தெவர் பாண்டே மத்திய பொதுத் துறை சீரமைப்பு மற்றும் குறைகேட்புத் துறை, ஓய்வூதியர் நலம் உள்ளிட்ட துறைகளின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிறுவன விவகாரத் துறையின் சிறப்பு செயலராக உள்ள அஞ்சலிபாவ்ரா தற்போது மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் துறை சிறப்புச் செயல ராக உள்ள அனில் குமார் ஜா தற்போது மத்திய பழங்குடியின விவகாரத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT