Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM
மகாராஷ்டிராவில் சீக்கிய பேர ணிக்கு அனுமதி மறுத்தத்தால் கோபம் அடைந்த இளைஞர்கள், பட்டாக்கத்தியால் தாக்கியதில் 4 போலீஸார் படுகாயம் அடைந் தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் உள்ள குருத் வாராவில், ஆண்டுதோறும், ‘ஹோலா மொஹல்லா’ என்ற பெயரில் பேரணி நடத்துவார்கள். அப்போது இளைஞர்கள் சீக்கிய தற்காப்புக் கலைகளை நிகழ்த்தியபடி ஊர்வலம் செல்வார்கள். இந்த ஆண்டு அந்தப் பேரணிக்கு அனுமதி கேட்டு குருத்வாரா நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். ஆனால், மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் அதிகமாகி உள்ளதால், பேரணிக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
இதுதொடர்பாக குருத்வாரா நிர்வாகிகளுடன் போலீஸ் உயரதி காரிகள் பேசினர். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டு, அதிக எண்ணிக்கையில் கூட்டம் சேர்க்காமல், குருத்வாராவுக்கு உள்ளேயே நிகழ்ச்சியை நடத்திக் கொள்வதாக கூறியிருந்தனர். அதன்படி, நேற்றுமுன்தினம் மாலை குருத்வாராவில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான சீக்கிய இளைஞர்கள் அதில் பங்கேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குருத்வாராவை சுற்றி போலீஸார் தடுப்புகள் அமைத்திருந்தனர்.
இந்நிலையில், சீக்கிய இளைஞர்கள் திடீரென குருத் வாரா கதவை திறந்து கொண்டு கும்பலாக வெளியில் வந்தனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்த போலீஸார் மீது தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் தாக்கினர். இதில் 4 போலீஸார் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 18 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT