Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM
கரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அடுத்த 28 நாட்களுக்கு ரத்தம் கொடுக் கக் கூடாது என்று தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் (என்பிடிசி) அறிவித்துள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்புமருந்துகள் ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகின் றன. முதல்கட்டமாக, முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கும் செலுத்தப்பட்ட இந்த தடுப்பூசிகள், மார்ச் 1-ம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்தப்படுகின்றன. தற்போது வரை நாடு முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இந்த தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்த கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்வது குறித்து தேசிய ரத்தப் பரிமாற்றக் கவுன்சில் (என்பிடிசி) அண்மையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. இதுகுறித்து என்.பி.டி.சி. இயக்குநர் டாக்டர்சுனில் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா தடுப்பூசியானது ஒருநபருக்கு 28 நாட்கள் இடைவெளி யில் இரண்டு டோஸ்கள் வீதம் செலுத்தப்படுகின்றன. இதில், கடைசி டோஸ் எடுத்துக் கொண் டவர்கள் 28 நாட்களுக்கு பிறகே ரத்த தானமோ அல்லது பிறருக்கு ரத்தம் கொடுக்கவோ முடியும்.
ஏனெனில், இரண்டாம் டோஸ் எடுத்துக் கொண்டவர்களின் ரத்தத்தில் 2 வாரங்களுக்கு பிறகுதான் கரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி உற்பத்தி ஆகும். எனவே, இதற்கு நடுவில் உள்ள காலக்கட்டத்தில் அவர்கள் யாருக்கும் ரத்தம் கொடுக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி களை செலுத்திக் கொண்டவர்கள் மது அருந்தக்கூடாது என்ற எச்சரிக்கை தகவல் பரவி வந்தது. ஆனால் இதில் உண்மையில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT