Published : 10 Nov 2015 11:52 AM
Last Updated : 10 Nov 2015 11:52 AM
அந்தமான் நிகோபார் தீவுகளை சுற்றியுள்ள கடற்பகுதியில் 12 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகள் மற்றும் அதற்கு மேல் பதிவாகி யுள்ளன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அந்தமான் பிராந்தியத்தில் நேற்று மட்டும் 9 நிலநடுக்கம் ஏற்பட் டது. இவற்றில் ஒன்று இந்தோனேசி யாவின் வடக்கு சுமத்ரா பகுதியி லும் மற்றவை அந்தமான் நிகோபார் தீவுகளை சுற்றியும் பதிவாகியுள் ளன. அனைத்து நிலநடுக்கங்களும் கடலில் 10 முதல் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளன.
இதே பகுதியில்தான் கடந்த 2004-ல் கடும் நிலநடுக்கமும் இதைத் தொடர்ந்து மிகப்பெரிய சுனாமியும் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT