Published : 17 Mar 2021 12:01 PM
Last Updated : 17 Mar 2021 12:01 PM

தீவிரமாக பரவும் கரோனா: தினசரி பாதிப்பு 28,903 ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையும் உயர்வு

நாடு முழுவதும் அண்மையில் கரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில் புதிதாக 28,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,38,734 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 17,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,10,45,284 பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 188பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,59,044 ஆக அதிகரிதுள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,34,406 ஆக உள்ளது. இதுவரை 3,50,64,536பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x