Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM
கர்நாடக மாநில சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர், கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்தார். அதன்பிறகு 2004-ம் ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2005-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின், குழந்தையை பராமரிக்க பணம் வழங்க கோரி பாகல்கோட் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், ஆண் குழந்தையின் பராமரிப்பு செலவுக்கு 18 வயதாகும் வரை மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அந்த ஊழியர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முதல் மனைவியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பராமரிப்பு தொகையை குறைத்து கொள்ள சம்மதிக்கிறோம். ஆனால், குழந்தை பட்டப்படிப்பு முடிக்கும் வரை வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.
அதன்பின் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘முதல் மனைவியின் குழந்தையை பராமரிக்க மார்ச் 1, 2021-ம் தேதி முதல் ரூ.10 ஆயிரம்வழங்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் அந்தக் குழந்தை கல்லூரிபடிப்பை முடிக்கும் வரை தந்தை உதவி செய்ய வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT