Published : 12 Nov 2015 08:56 AM
Last Updated : 12 Nov 2015 08:56 AM

ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை, தீபாவளி ஆஸ் தானம் வெகு சிறப்பாக நடைபெற் றது. இதையொட்டி சுப்ரபாதம் சேவையை தவிர்த்து, மற்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏழுமலையானுக்கு தீபாவளி ஆஸ்தான சேவை நேற்று வெகு சிறப்பாக செய்யப்பட்டது. கோயிலில் நேற்று காலை, சுப்ரபாத சேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தங்க வாசல் அருகே உற்சவ மூர்த்திகளான, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சேனாதிபதியான விஸ்வகேசவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர், மூலவருக்கு புத்தாடை கள், விசேஷ பலகாரங்களை ஜீயர் சுவாமிகள் கொண்டுசென்றார். இவை சுவாமிக்கு சாத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள், அறங்காவலர் குழுவினர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். தீபாவளி ஆஸ்தானத்தை தொடர்ந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x