Last Updated : 27 Dec, 2020 11:45 AM

 

Published : 27 Dec 2020 11:45 AM
Last Updated : 27 Dec 2020 11:45 AM

கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 6 மாதங்களுக்குப் பின் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 732 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்துக்குப் பின் நாள்தோறும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் முதல் முறையாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 97 லட்சத்து 61 ஆயிரத்து 538 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.82 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 690 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 279 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 60 பேர், டெல்லியில் 23 பேர், மேற்கு வங்கத்தில் 33 பேர், கேரளாவில் 21 பேர், உத்தரப் பிரதேசத்தில் 14 பேர், உத்தரகாண்டில் 13 பேர், பஞ்சாப், சத்தீஸ்கரில் தலா 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 16 கோடியே 81 லட்சத்து 2 ஆயிரத்து 657 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 43 ஆயிரத்து 368 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x