Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

வீரர்களுக்கான ரயில்களை தடுத்து வரும் விவசாயிகள் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அனுப்பியுள்ள 8 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:

லடாக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. லடாக் உட்பட சவாலான பல்வேறு எல்லைப் பகுதிகளில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு ரயில்களில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அந்த ரயில்களை மறிப்பவர்கள் விவசாயிகள் கிடையாது. கரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க சுயசார்பு இந்தியா திட்டத்தை மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்று சில விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x