Last Updated : 31 Oct, 2015 10:58 AM

 

Published : 31 Oct 2015 10:58 AM
Last Updated : 31 Oct 2015 10:58 AM

அறிவுஜீவிகளுக்கு சகிப்புத்தன்மை இல்லை: ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு

"அறிவுஜீவிகளுக்கு ஆண்டாண்டு காலமாகவே இந்து மதம், சங் பரிவார் அமைப்புகள் மீது சகிப்புத்தன்மை இல்லை"

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகக் கூறி விருதிகளை திருப்பியளித்து வரும் அறிவுசார் சமூகத்தினரை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய பிரச்சார பிரமுகர் மன்மோகன் வைத்யா தி இந்து (ஆங்கில நாளிதழிடம்) கூறும்போது, "அறிவுஜீவிகளுக்கு ஆண்டாண்டு காலமாகவே சங் பரிவார் அமைப்புகள், இந்து மதம் மீது சகிப்புத்தன்மை இல்லை.

ராஞ்சியில் நடைபெற்று வரும் சங்க கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுதவிர ஆர்.எஸ்.எஸ். விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் சிலர் இந்து மதத்தின் மீது சங் பரிவார் அமைப்புகள் மீதும் சகிப்புத்தன்மையின்மையை கடைபிடித்து வருகின்றனர். அவர்களை இவ்வளவு ஆண்டுகளாக நாங்கள் சகித்துக் கொண்டே இருந்திருக்கிறோம். ஆனால், அவர்கள் இப்போது சகிப்புத்தன்மை குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் எங்களை புறக்கணித்தாலும்கூட மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். பொது மக்கள் காட்டும் பெரும் ஆதரவை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் விளைவாகவே, விருதுகளை திருப்பியளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களில் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது" என்றார்.

இதேபோல், ஆர்.எஸ்.எஸ். துணை பொதுச் செயலாளர் ஹோஸ்பலே கூறும்போது, "மாநிலங்களில் நடந்த கொலை, வன்முறைச் சம்பங்களுக்கு மத்திய அரசிடம் கேள்வி எழுப்புவது என்ன நியாயம்" என்றார். இதே கருத்தை பாஜக

சங் பரிவார் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர், "இப்போது கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகள் காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்பட்டபோதும், கோத்ராவில் ராம் சேவகர்கள் கொல்லப்பட்டபோதும் எங்கே சென்றனர்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x