Published : 22 May 2014 12:00 AM
Last Updated : 22 May 2014 12:00 AM
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், பூடான் பிரதமர் ஸ்ரிங் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லா யாமின் ஆகிய சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சார்க் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறை.
மே 26-ல் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT